/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கிருஷ்ணகிரி அரசு விடுதியில் ஆய்வு
/
ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கிருஷ்ணகிரி அரசு விடுதியில் ஆய்வு
ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கிருஷ்ணகிரி அரசு விடுதியில் ஆய்வு
ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கிருஷ்ணகிரி அரசு விடுதியில் ஆய்வு
ADDED : செப் 03, 2024 04:40 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ராஜாஜி நகர், அரசு ஆதிதிராவிடர் நல கல்லுாரி மாணவியர் விடுதியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆதி-திராவிடர் மாணவ, மாணவியருக்கு, 4 விடுதிகள், பள்ளி மாணவ, மாணவியருக்கு, 22 விடுதிகள் என மொத்தமுள்ள, 26 விடுதிகளில், 1,536 பேர் தங்கியுள்ளனர். இதில் கிருஷ்ணகிரி ஆதி திராவிட கல்லுாரி மாணவியருக்கான விடுதியில் அடிப்-படை வசதிகள், உணவு, மற்ற வசதிகள் முறையாக உள்ளதா என்-பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கல்லுாரி மாணவியரின் மாலை நேர வகுப்பு, பாடத்திட்டங்கள் குறித்து, விடுதி காப்-பாளர் கண்காணிக்க வேண்டும். வருகை பதிவேடு உள்ளிட்ட விபரங்கள் தெளிவாக இருக்க வேண்டுமெனவும் அறிவுறித்தப்-பட்டது,” என்றார்.
மாவட்ட கலெக்டர் சரயு, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் முன்னிலையில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு-டியினர் நல அலுவலர் ரமேஷ்குமார், கிருஷ்ணகிரி தாசில்தார் பொன்னாலா விடுதி காப்பாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவ-லர்கள் கலந்து கொண்டனர்.