ADDED : ஜூலை 20, 2024 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்:ப.வேலுார், பழைய பைபாஸ் சாலை, நல்லியாம்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார், 34; லாரி பட்டறை வைத்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, வழக்கம்போல் பணி முடிந்து வீட்டுக்கு சென்றார்.
பின், நேற்று காலை ஒர்க் ஷாப் சென்று பார்த்தபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இரண்டு லாரிகளில் இருந்த பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.இதுகுறித்து புகார்படி, ப.வேலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.