sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விவசாயிகள் விதைப்பண்ணை அமைத்து லாபம ்பெற அழைப்பு

/

விவசாயிகள் விதைப்பண்ணை அமைத்து லாபம ்பெற அழைப்பு

விவசாயிகள் விதைப்பண்ணை அமைத்து லாபம ்பெற அழைப்பு

விவசாயிகள் விதைப்பண்ணை அமைத்து லாபம ்பெற அழைப்பு


ADDED : செப் 08, 2024 01:10 AM

Google News

ADDED : செப் 08, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விவசாயிகள் விதைப்பண்ணை

அமைத்து லாபம ்பெற அழைப்பு

நாமக்கல், செப். 8-

'விதைப்பண்ணை அமைத்து லாபம் பெற' நாமக்கல் வேளாண்மை இணை இயக்குனர் (பொ) பேபிகலா, விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், சம்பா பருவத்தில் சராசரியாக நெல் பயிர், 8,700 ஹெக்டேர், சிறுதானியங்கள் பயிர், 76,000 ஹெக்டேர், பயறு வகை பயிர்கள், 12,000 ஹெக்டேர், எண்ணெய் வித்து பயிர்கள், 33,000 ஹெக்டேர் சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடி செய்யப்படும் பயிர்களில் கூடுதல் லாபம் பெற, வேளாண்மை துறையில் விதைப்பண்ணையாக பதிவு செய்து களப்பணியாளர்களின் வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்புகள் உயர் தொழில்நுட்பங்களை பின்பற்றி சாகுபடி செய்ய வேண்டும்.

அப்போது, சராசரியாக பெறும் மகசூலை விட கூடுதலாக மகசூல் ஈட்ட முடியும். அத்துடன் விதைப்பண்ணை மூலம் பெறப்படும் விதைகளுக்கு சந்தை விலையை விட கூடுதலாக அரசு டான்சிடா கொள்முதல் விலை பெற முடியும், இதனால் விவசாயிகள் நல்ல வருவாய் ஈட்ட முடியும். நடப்பாண்டில் விதைப்பண்ணை சாகுபடியை ஊக்கவிக்கும் வகையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு நெல் பயிர் தலா, 1.0 ஹெக்டேர், சிறுதானியங்கள் ஆதி திராவிடர் 2.50 ஹெக்டேர், பழங்குடியினருக்கு, 1.40 ஹெக்டேர், பயறு வகை பயிர்கள் ஆதி திராவிடருக்கு 5.70 ஹெக்டேர், பழங்குடியினருக்கு 3.2 ஹெக்டேர், எண்ணெய் வித்து பயிர்கள் ஆதி திராவிடருக்கு 10.0 ஹெக்டேர், பழங்குடியினருக்கு, 8.0 ஹெக்டேர், அளவில் விதைப்பண்ணை அமைத்து பயன் பெற தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, நடப்பு பருவத்தில் நெல், சிறுதானியங்கள், பயறு வகை பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகள் இந்த ஆண்டு அதிகளவில் விதைப்பண்ணை அமைத்து பயனடையலாம். எனவே அருகாமையிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us