sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

/

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : ஜூன் 29, 2024 02:59 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்துறை வெளியிட்ட செய்திக்

குறிப்பு:

ராசிபுரம் பகுதியில், 2024--25ம் ஆண்டின், பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில், காரீப் பருவத்தில் பயிர்களுக்கு காப்பீடு செய்யப்படவுள்ளது.

இதில், பாசிப்பயறுக்கு பிரிமீய தொகையாக ஏக்கருக்கு, 304.30- ரூபாய், நிலக்கடலைக்கு, 420.89- ரூபாய், சோளம், 136.80- ரூபாய், மக்காச்சோளம், 638.25- ரூபாய், பருத்திக்கு, 499.80- ரூபாய், சின்ன வெங்காயம், 1,230.06- ரூபாய், தக்காளிக்கு, 1,017.64- ரூபாய், மரவள்ளிக்கு, 619.48- ரூபாய், மஞ்சளுக்கு, 3,215.94- ரூபாய், வாழைக்கு, 1,857.44- ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கு குறிப்பிட்ட தேதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

எனவே, காரீப் பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள், அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ காப்பீடு செய்யலாம்.

கடன்பெறா விவசாயிகள், பொது சேவை மையங்களிலோ அல்லது தேசிய பயிர் காப்பீடு இணையதளத்தில் உள்ள, 'விவசாயிகள் கார்னரில்' நேரிடையாகவோ காப்பீடு செய்யலாம்.

கூடுதல் விபரங்களுக்கு, ராசிபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர், வேளாண்மை அலுவலர்களை அணுகலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us