sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வெங்காய வயலில் தேங்கிய மழைநீர்:வேர் அழுகல் நோய் ஏற்படும் அபாயம்

/

வெங்காய வயலில் தேங்கிய மழைநீர்:வேர் அழுகல் நோய் ஏற்படும் அபாயம்

வெங்காய வயலில் தேங்கிய மழைநீர்:வேர் அழுகல் நோய் ஏற்படும் அபாயம்

வெங்காய வயலில் தேங்கிய மழைநீர்:வேர் அழுகல் நோய் ஏற்படும் அபாயம்


ADDED : ஆக 11, 2024 02:18 AM

Google News

ADDED : ஆக 11, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை;ராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை சுற்று வட்டார பகுதியில், நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. நாமகிரிப்பேட்டை, ஆர்.புதுப்பட்டி, தண்ணீர்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, சீராப்பள்ளி, பட்டணம் உள்ளிட்ட பகுதியில், இரவு, 9:00 மணிக்கு துாறல் மழையாக தொடங்கியது. சிறிது நேரத்தில் கன மழையாக மாறியது. இரவு முழுவதும் மழை பெய்தது. காலை, 6:00 மணிக்குத்தான் மழை ஓய்ந்தது. இதனால், சாலையோரங்களில் மழைநீர் தேங்கியது. முக்கியமாக வயல்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது.

சாக்கடைகளில் பல இடங்களில் அடைப்பு இருந்ததால் மழைநீர் செல்லாமல் சாலைகளில் வழிந்தோடியது. மேலும், நாமகிரிப்பேட்டை பஸ் ஸ்டாண்டில் பயணிகள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளன. மூலப்பள்ளிப்பட்டி பகுதியில் வெங்காய வயல்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கியுள்ளது. மழைநீர் வடியாமல் போனால் வெங்காயத்தில் வேர் அழுகல் நோய் ஏற்படும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us