sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஜி.ஹெச்.,ல் பிரேத பரிசோதனை செய்ய மறுப்பதாக போலீசார் குற்றச்சாட்டு தலைமை டாக்டர் மறுப்பு

/

ஜி.ஹெச்.,ல் பிரேத பரிசோதனை செய்ய மறுப்பதாக போலீசார் குற்றச்சாட்டு தலைமை டாக்டர் மறுப்பு

ஜி.ஹெச்.,ல் பிரேத பரிசோதனை செய்ய மறுப்பதாக போலீசார் குற்றச்சாட்டு தலைமை டாக்டர் மறுப்பு

ஜி.ஹெச்.,ல் பிரேத பரிசோதனை செய்ய மறுப்பதாக போலீசார் குற்றச்சாட்டு தலைமை டாக்டர் மறுப்பு


ADDED : செப் 03, 2024 04:26 AM

Google News

ADDED : செப் 03, 2024 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: நான்கு வயது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த சம்ப-வத்தில், உடலை பிரேத பரிசோதனை செய்ய ப.வேலுார் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மறுத்ததால், நாமக்கல் அரசு மருத்து-வமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் போலீசார், உறவி-னர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு, தின-சரி, 500 புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். ப.வேலுார், ஜேடர்பாளையம், பரமத்தி போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதி-களில் ஏற்படும் விபத்து, தற்கொலை செய்து இறந்தவர்களின் சட-லங்களை பிரேத பரிசோதனைக்கு, ப.வேலுார் அரசு மருத்துவம-னைக்கு கொண்டு வருவது வழக்கம். விபத்து, நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், ஒவ்வொரு மாதமும் பத்துக்கும் மேற்-பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், 4 வயது மகள் பூவரசியை கிணற்றில் வீசி, தாய் சினேகா கொலை செய்தார். சடலத்தை மீட்ட போலீசார், ப.வேலுார் அரசு மருத்துவமனை குளிரூட்டும் பெட்டியில் வைத்-தனர். நேற்று, வழக்கு சம்பந்தமாக அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், பிரேத பரிசோதனை செய்ய ப.வேலுார் போலீசார், குழந்தையின் உறவினர்கள், நேற்று காலை, 11:00 மணி முதல் காத்திருந்தனர். மதியம், 2:00 மணிக்கு, ப.வேலுார் அரசு மருத்துவமனை டாக்டர்கள், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய இயலாது. நாமக்கல் அரசு மருத்துவம-னைக்கு கொண்டு செல்லுங்கள் என தெரிவித்துள்ளனர். இதனால், வேறு வழியின்றி, பிரேதத்தை நாமக்கல் அரசு மருத்து-வமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து, ப.வேலுார் போலீசார் கூறியதாவது:

ப.வேலுார் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், கடந்த சில மாதங்களாக பிரேத பரிசோதனை செய்ய மறுத்து வரு-கின்றனர். ஏனென்றால், இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வர நேரிடும் என்பதால், டாக்டர்கள் பிரேத பரி-சோதனை செய்ய மறுக்கின்றனர். சில நாட்களுக்கு முன், துாக்கு-மாட்டி தற்கொலை செய்துகொண்ட நபரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மறுத்து விட்டதால், நாமக்கல் அரசு மருத்து-வமனைக்கு கொண்டு சென்றோம். மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களை ரத்த பரிசோதனை செய்ய ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால், ரத்த பரிசோதனை செய்ய மறுத்து நாமக்கல் அனுப்புகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ப.வேலுார் அரசு மருத்துவமனையின், தலைமை டாக்டர் ஜெயந்-தியிடம் கேட்டபோது, ''பிரேத பரிசோதனை செய்ய நாங்கள் மறுப்பதில்லை. போலீசார் கேட்டுக்கொண்டதின் பேரில், நாமக்கல் அனுப்பி வைத்தோம். மேற்கொண்டு இதுகுறித்து விசா-ரணை நடத்துகிறேன்,'' என்றார்.






      Dinamalar
      Follow us