sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரேஷன் அரிசி 1,260 கிலோ பறிமுதல்

/

ரேஷன் அரிசி 1,260 கிலோ பறிமுதல்

ரேஷன் அரிசி 1,260 கிலோ பறிமுதல்

ரேஷன் அரிசி 1,260 கிலோ பறிமுதல்


ADDED : செப் 07, 2024 07:53 AM

Google News

ADDED : செப் 07, 2024 07:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, 1,260 கிலோ ரேஷன் அரிசியை, குடிமைப்பொருள் குற்றப்புலானய்வு போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எஸ்.ஐ., ஆறுமுக நயினார் தலைமையில் போலீசார், ராசிபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள மின்னாம்பள்ளி சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த, 'மாருதி' வேனை சோதனை செய்து பார்த்தபோது, 9 மூட்டைகளில், 450 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்படி, ரேஷன் அரிசியை கடத்தி வந்த, தொட்டியப்பட்டியை சேர்ந்த மணி மகன் முத்துவிடம், 30, விசாரணை நடத்தினர். அதில், வையப்பமலை, மின்னாம்பள்ளி, எலச்சிபாளையம் ஆகிய பகுதியில் வசிக்கும் மக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் பகுதிகளில் தட்டுவடை, அதிரசம், முறுக்கு செய்யும் நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து, 1,260 கிலோ ரேஷன் அரிசியையும், ரேஷன் அரிசி கடத்துவதற்கு பயன்படுத்திய மாருதி வேனை பறிமுதல் செய்ததுடன், முத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us