/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொழிலாளி வீட்டில் 2 பவுன் நகை திருட்டு
/
தொழிலாளி வீட்டில் 2 பவுன் நகை திருட்டு
ADDED : மே 08, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம், புதுச்சத்திரம் யூனியன், ஏளூர் அருகே, வேப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 58; பவர்லுாம் தொழிலாளி. இவரும், இவரது மனைவியும், நேற்று வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் கதவை உடைத்து பீரோவின் அருகே வைத்திருந்த சாவியை எடுத்துள்ளனர். பின், பீரோ கதவை திறந்து, இரண்டு பவுன் நகை, வெள்ளி கொலுசு, 50,000 ரூபாயை திருடி சென்றனர். புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

