/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
7 மையத்தில் 'டெட்' தேர்வு 233 தேர்வர் 'ஆப்சென்ட்'
/
7 மையத்தில் 'டெட்' தேர்வு 233 தேர்வர் 'ஆப்சென்ட்'
ADDED : நவ 16, 2025 02:26 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், ஏழு மையங்களில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 1,475 பேர் பங்கேற்றனர். 233 தேர்வர்கள் கலந்-துகொள்ளவில்லை.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், தமிழக பள்ளிகளில் இடை-நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற தகுதி பெறு-வதற்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு, தமிழகம் முழு-வதும் நேற்று, இன்றும் நடக்கிறது. தமிழகத்தில், ஒட்டுமொத்த-மாக, 4.80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்-நிலைப்பள்ளி, நாமக்கல் நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நி-லைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் ஜெய் விகாஸ், 2, மேல்நிலைப்பள்ளி, டிரினிடி அகாடமி, குறிஞ்சி மெட்ரிக் பள்ளி என, ஏழு மையங்களில் இத்தேர்வு நடந்தது. இதற்காக, மாவட்டம் முழுவதும் இருந்து, 1,708 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த தாள்-1 தேர்விற்கு, காலை, 8:30 மணி முதல் தேர்வர்கள் வருகை தரத்துவங்கினர். 9:30 மணிக்கு மேல் யாரையும் அனுமதிக்கவில்லை.
நேற்று நடந்த தேர்வில், 1,475 பேர் பங்கேற்றனர். 233 தேர்-வர்கள் கலந்துகொள்ளவில்லை. இன்று நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2ல், 9,656 பேர் பங்கேற்கின்றனர்.

