sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் உழவர் சந்தையில் 27 டன் காய்கறி விற்பனை

/

நாமக்கல் உழவர் சந்தையில் 27 டன் காய்கறி விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் 27 டன் காய்கறி விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் 27 டன் காய்கறி விற்பனை


ADDED : அக் 21, 2024 07:26 AM

Google News

ADDED : அக் 21, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் கோட்டை சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, தினமும், காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்குதேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மொத்தம், 200 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 22,195 கிலோ காய்கறிகள், 5,435 கிலோ பழங்கள், 15 கிலோ பூக்கள் என, மொத்தம், 27,545 கிலோ எடையுள்ள விளைபொருட்கள், விற்பனை செய்யப்பட்டது. அவற்றை, 5,529 நுகர்வோர் வாங்கி சென்றனர். அதன் மூலம், 11 லட்சத்து, 72,990 ரூபாய்க்கு விற்பனையானது.






      Dinamalar
      Follow us