sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

30ல் அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறைதீர் நாள் கூட்டம்: கண்காணிப்பாளர்

/

30ல் அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறைதீர் நாள் கூட்டம்: கண்காணிப்பாளர்

30ல் அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறைதீர் நாள் கூட்டம்: கண்காணிப்பாளர்

30ல் அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறைதீர் நாள் கூட்டம்: கண்காணிப்பாளர்


ADDED : செப் 19, 2024 07:34 AM

Google News

ADDED : செப் 19, 2024 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'வரும், 30ல் அஞ்சல் துறை வாடிக்கையாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது' என, நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்-பாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் - திருச்சி சாலை, ஆண்டவர் பங்க் அருகே, ரவி பிளாசா கட்டடத்தில் உள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவல-கத்தில், வரும், 30 காலை, 11:00 மணிக்கு, 'அஞ்சல் துறை வாடிக்-கையாளர்கள் குறை தீர்க்கும்

நாள் கூட்டம்' நடக்கிறது. அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள், தங்களுக்கு சேவை பெறுவதில் குறைகள் ஏதாவது இருப்பின், 'அஞ்சல் கோட்ட கண்காணிப்-பாளர், நாமக்கல் கோட்டம், நாமக்கல்--637001' என்ற முகவரிக்கு, வரும்,

25க்குள் புகார்களை அனுப்பலாம்.அஞ்சல் உறை மீது, 'அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் மனு -சம்பந்தமாக' என, எழுதவேண்டும். குறை தீர்க்கும் கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு புகார்கள் தெரிவிக்க விரும்பினால், நேரடியாகவும்

சுலந்துகொள்ளலாம். புகார் கடி-தத்தில் முழு தகவல்களும் குறிப்பிட வேண்டும். அதாவது அனுப்பும் முகவரி, அனுப்பிய முகவரி, ரெஜிஸ்டர் தபால், ஸ்பீடு போஸ்ட், மணியார்டர் எண், அலுவலகத்தில் இருந்து அனுப்பப்-பட்டது

மற்றும் அனுப்பப்பட்ட தேதியையும் குறிப்பிட வேண்டும்.புகார்கள் சேமிப்பு கணக்கில் அல்லது அஞ்சல் ஆயுள் காப்-பீட்டில் இருந்தால், அதன் கணக்கு எண் பி.எல்., - ஆர்.பி.எல்.ஐ., பாலிசி நெம்பர், முகவரி மற்றும் எந்த அலுவலகத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது ஆகிய விபரங்களை

குறிப்பிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us