/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் உழவர் சந்தையில் 55 டன் காய்கறி ஒரே நாளில் ரூ.24.18 லட்சத்திற்கு விற்பனை
/
நாமக்கல் உழவர் சந்தையில் 55 டன் காய்கறி ஒரே நாளில் ரூ.24.18 லட்சத்திற்கு விற்பனை
நாமக்கல் உழவர் சந்தையில் 55 டன் காய்கறி ஒரே நாளில் ரூ.24.18 லட்சத்திற்கு விற்பனை
நாமக்கல் உழவர் சந்தையில் 55 டன் காய்கறி ஒரே நாளில் ரூ.24.18 லட்சத்திற்கு விற்பனை
ADDED : டிச 29, 2025 07:14 AM
நாமக்கல்: நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 55 டன் காய்கறி, 24.18 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர்-சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும், அதி-காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்-டங்களில் விளைந்த காய்கறி, பழங்கள், கீரை வகைகளை அறுவடை செய்து வந்து, நேரடியாக விற்பனை செய்கின்றனர்.பொதுமக்கள், உழவர் சந்தைக்கு வந்து காய்கறி-களை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை-களில், அதிக அளவில் பொதுமக்கள் உழவர் சந்-தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், வழக்-கத்தை விட உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 192 விவசா-யிகள், உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்ப-னைக்கு கொண்டுவந்திருந்தனர்.
அதன்படி, 43,440 கிலோ காய்கறி, 11,550 கிலோ பழம், 40 கிலோ பூக்கள் என மொத்தம், 55,030 கிலோ எடையுள்ள விளைபொருட்கள், கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
அவற்றை, 11,006 பேர் வருகை தந்து, தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி சென்-றனர். அவற்றின் மூலம், 24 லட்சத்து, 18,285 ரூபாய்க்கு விற்பனையானது.
தக்காளி ஒரு கிலோ, 55 ரூபாய், கத்தரி, 54, வெண்டை, 50, புடலங்காய், 42, பீர்க்கங்காய், 76, பாகற்காய், 65, அவரை, 65, முருங்கைக்காய், 80, சின்ன வெங்காயம், 50, பெரிய வெங்காயம், 32, தேங்காய், 56 ரூபாய் என்ற விலையில் விற்ப-னையானது.

