sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

உழவர் சந்தையில் 61 டன் காய்கறி ரூ.23.60 லட்சத்திற்கு வியாபாரம்

/

உழவர் சந்தையில் 61 டன் காய்கறி ரூ.23.60 லட்சத்திற்கு வியாபாரம்

உழவர் சந்தையில் 61 டன் காய்கறி ரூ.23.60 லட்சத்திற்கு வியாபாரம்

உழவர் சந்தையில் 61 டன் காய்கறி ரூ.23.60 லட்சத்திற்கு வியாபாரம்


ADDED : மே 05, 2025 02:59 AM

Google News

ADDED : மே 05, 2025 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 61 டன் காய்-கறி, 23.60 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

நாமக்கல் கோட்டை சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வரு-கிறது. இங்கு, தினமும் காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர்.

வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை-களில், அதிகளவில் வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மொத்தம், 227 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தி-ருந்தனர். 50,625 கிலோ காய்கறிகள், 11,025 கிலோ பழங்கள், 20 கிலோ பூக்கள் என மொத்தம், 61,670 கிலோ எடையுள்ள விளை

பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. அவற்றை, 12,334 நுகர்வோர் வாங்கி சென்றனர்.

அதன் மூலம், 23 லட்சத்து, 60,150 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி கிலோ, 16 ரூபாய், கத்தரி, 36, வெண்டை, 32, சின்ன வெங்காயம், 38, பெரிய வெங்காயம், 25 ரூபாய்க்கு விற்பனை-யானது.






      Dinamalar
      Follow us