/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
8 தாலுகா அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர் முகாம்
/
8 தாலுகா அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர் முகாம்
ADDED : அக் 11, 2025 01:18 AM
நாமக்கல், 'எட்டு தாலுகா அலுவலகங்களில், இன்று நுகர்வோர் குறைதீர் முகாம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், பொது வினியோக திட்டம் மூலம் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், மொபைல் எண் பதிவு மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை, நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி மேற்கொள்ள, பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம், இன்று, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 8 தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது.
காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை, நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார், குமாரபாளையம் ஆகிய தாலுகா அலுவலகங்களில் உள்ள, வட்ட வழங்கல் பிரிவில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடக்கிறது. பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, பொது வினியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்துகொள்ள பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.