sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தல் ஞாயிறையொட்டி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

/

தல் ஞாயிறையொட்டி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

தல் ஞாயிறையொட்டி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

தல் ஞாயிறையொட்டி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்


ADDED : ஜூலை 21, 2025 08:06 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 08:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல், மலைக்கோட்டை எதிரே, வரலாற்று சிறப்புமிக்க ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஒரே கல்லில், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி, சாந்த சொரூபியாக நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாள்தோறும், இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினசரி வருகை தரும் திரளான பக்தர்கள், ஆஞ்சநேயரை தரிசனம் செய்து செல்கின்றனர். நேற்று, ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை, 9:30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் நடந்தது.

தொடர்ந்து, நல்லெண்ணெய், சீயக்காய்த்துாள், திருமஞ்சள், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், 1,008 லிட்டர் பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us