sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆடி வெள்ளி: அம்மன் கோவில்களில் வழிபாடு

/

ஆடி வெள்ளி: அம்மன் கோவில்களில் வழிபாடு

ஆடி வெள்ளி: அம்மன் கோவில்களில் வழிபாடு

ஆடி வெள்ளி: அம்மன் கோவில்களில் வழிபாடு


ADDED : ஆக 10, 2024 06:47 AM

Google News

ADDED : ஆக 10, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ஆடி, நான்காம் வெள்ளிக்கிழமையான நேற்று மாலை, 6:00 மணிக்கு, செல்லப்பம்பட்டி சுயம்பு மாரியம்மன் கோவிலில், சுவாமிக்கு, பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், பழ வகைககள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்க-ளுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், நாமக்கல் பலபட்டறை மாரியம்மன், எஸ்.வாழ-வந்தி செல்லாண்டியம்மன், மாரியம்மன் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபி-ஷேகம், ஆராதனை நடந்தது.

* நாமக்கல் -- சேந்தமங்கலம் சாலை, எம்.ஜி.ஆர்., நகரில், தங்-காயி மற்றும் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் திருக்கோவில் அமைந்-துள்ளது. கருட பஞ்சமி மற்றும் வளர்பிறை பஞ்சமி திதியை-யொட்டி, நேற்று காலை, 8:00 மணிக்கு சிறப்பு மஹா அபி-ஷேகம் நடந்தது.

தொடர்ந்து மஹா வாராஹி அம்மனுக்கு, 10,008 வளையல்-களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

* ப.வேலுார், சுல்தான்பேட்டை பகவதி அம்மன் கோவிலில், மாலை, 6:00 மணிக்கு குத்து விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

* வெண்ணந்துார் அருகே, அத்தனுார் அம்மன் கோவிலில், அம்-மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதேபோல், வெண்ணந்துார் செல்வ மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

* ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில், 108 கிலோ அன்னத்தில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்-தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us