sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமகிரிப்பேட்டை விளையாட்டு மைதானத்தில் நிதி முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு

/

நாமகிரிப்பேட்டை விளையாட்டு மைதானத்தில் நிதி முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு

நாமகிரிப்பேட்டை விளையாட்டு மைதானத்தில் நிதி முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு

நாமகிரிப்பேட்டை விளையாட்டு மைதானத்தில் நிதி முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு


ADDED : செப் 03, 2025 12:50 AM

Google News

ADDED : செப் 03, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை யூனியன், ஊனாந்தாங்கல் கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பதில், நிதி முறைகேடு நடந்திருப்பதாக அப்பகுதி இளைஞர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

ராசிபுரம் அருகே, நாமகிரிப்பேட்டை யூனியன், ஊனாந்தாங்கல் கிராமத்தில், சில மாதங்களுக்கு முன் விளையாட்டு மைதானம் அமைக்க, 1.45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த மைதானத்தில் ஏற்கனவே, அப்பகுதி இளைஞர்கள் தங்களது சொந்த செலவில் கைப்பந்து மைதானத்திற்கு தேவையான உபகரணங்களை தயார் செய்து வைத்திருந்தனர்.

இந்நிலையில், மைதானத்திற்காக ஒதுக்கிய நிதியை செலவே செய்யாமல், மைதனாத்திற்கு வெளியே அடிக்கல் பலகை மட்டும் வைத்துள்ளனர். 100 ரூபாய்க்கு கூட அந்த விளையாட்டு மைதானத்திற்கு செலவு செய்யவில்லை என, அப்பகுதி இளைஞர்கள், மாவட்ட நிர்வாகத்திடம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மேலும், அதிகாரிகள் பார்வையிட்டு, விளையாட்டு மைதானத்திற்கு அந்த தொகையை செலவு செய்தால் இப்பகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்தனர்.

இதுகுறித்து, ஊனாந்தாங்கல் செயலாளர் ஈஸ்வரனிடம் கேட்டபோது, ''நான் தற்போதுதான் பணிக்கு வந்துள்ளேன். குறிப்பிட்ட விளையாட்டு மைதானம் எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் இருந்து செய்யப்படுகிறது. இப்பணி இன்னும் முடியவில்லை,'' என்றார்.

ஆனால், அறிவிப்பு பலகையில், கடந்த ஜூலை மாதம், 28ல் பணி முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us