/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புரந்தரீஸ்வரர் கோவிலில் நாளை ஆருத்ரா தரிசன விழா
/
புரந்தரீஸ்வரர் கோவிலில் நாளை ஆருத்ரா தரிசன விழா
ADDED : ஜன 02, 2026 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம் அருகே காக்காவேரி சிவன் கோவிலில், நாளை ஆருத்ரா தரிசனம், திருக்கல்யாண வைபவம் நடக்க உள்ளது.
ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சியில் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி உடனுறை புரந்தரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா நாளை அதிகாலை, 4:00 மணிக்கு மேல் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் மற்றும் ஆருத்ரா தரிசன விழா நடக்க உள்ளது.

