sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மலைவேம்பு மரங்கள் 6 ஆண்டுகளில் தயார்

/

மலைவேம்பு மரங்கள் 6 ஆண்டுகளில் தயார்

மலைவேம்பு மரங்கள் 6 ஆண்டுகளில் தயார்

மலைவேம்பு மரங்கள் 6 ஆண்டுகளில் தயார்


ADDED : ஜன 02, 2026 05:03 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: மலைவேம்பு மரங்கள் நடவு செய்த, 6 ஆண்டுகளில தயாராகிவிடும் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.

நாமகிரிப்பேட்டை வேளாண்மை துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:வேகமாக வளரும் மர வகைகளில் மலைவேம்பும் ஒன்று. நடவு செய்த, 6 முதல் 7 ஆண்டுகளில் அறுவடைக்கு தயாராகிவிடும். பேக்கிங் பெட்டிகள், பலகை, விவசாய கருவிகள், பென்சில், கட்டு மரம், இசைக்கருவிகள், தேயிலை பெட்டிகள் செய்ய மலைவேம்பு மரங்கள் பயன்படுகின்றன. மேலும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மரக்கன்று, 4க்கு 4 அல்லது 5க்கு, 5 மீட்டர் இடைவெளியில் நடலாம். 30க்கு 30 செ.மீ., அளவில் குழி பறிக்க வேண்டும்.

ஜூன் முதல் அக்., வரை தண்ணீர் தாராளமாக விடலாம். 7 முதல், 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். குழிக்கு அரை கிலோ எரு அல்லது மண்புழு உரம் இட வேண்டும். பிளைவுட் உபயோகத்திற்கு, ஏழு ஆண்டுகளுக்கு பின் அறுவடை செய்யலாம். காகித தொழிற்சாலைக்கு, 2 முதல் 3 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். ஆறு ஆண்டுகள் முடிவில் ஒரு ஹெக்டேருக்கு, 200 டன் கிடைக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us