/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மலைவேம்பு மரங்கள் 6 ஆண்டுகளில் தயார்
/
மலைவேம்பு மரங்கள் 6 ஆண்டுகளில் தயார்
ADDED : ஜன 02, 2026 05:03 AM
நாமகிரிப்பேட்டை: மலைவேம்பு மரங்கள் நடவு செய்த, 6 ஆண்டுகளில தயாராகிவிடும் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.
நாமகிரிப்பேட்டை வேளாண்மை துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:வேகமாக வளரும் மர வகைகளில் மலைவேம்பும் ஒன்று. நடவு செய்த, 6 முதல் 7 ஆண்டுகளில் அறுவடைக்கு தயாராகிவிடும். பேக்கிங் பெட்டிகள், பலகை, விவசாய கருவிகள், பென்சில், கட்டு மரம், இசைக்கருவிகள், தேயிலை பெட்டிகள் செய்ய மலைவேம்பு மரங்கள் பயன்படுகின்றன. மேலும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
மரக்கன்று, 4க்கு 4 அல்லது 5க்கு, 5 மீட்டர் இடைவெளியில் நடலாம். 30க்கு 30 செ.மீ., அளவில் குழி பறிக்க வேண்டும்.
ஜூன் முதல் அக்., வரை தண்ணீர் தாராளமாக விடலாம். 7 முதல், 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். குழிக்கு அரை கிலோ எரு அல்லது மண்புழு உரம் இட வேண்டும். பிளைவுட் உபயோகத்திற்கு, ஏழு ஆண்டுகளுக்கு பின் அறுவடை செய்யலாம். காகித தொழிற்சாலைக்கு, 2 முதல் 3 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். ஆறு ஆண்டுகள் முடிவில் ஒரு ஹெக்டேருக்கு, 200 டன் கிடைக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

