ADDED : ஜன 01, 2026 08:10 AM
ராசிபுரம்: -ராசிபுரம்-சேலம் சாலையில் கிறிஸ்தவ தேவா-லயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மத-போதகராக காபிரியல் ரமேஷ், 40, என்பவர் உள்ளார். மனைவி ஷீலா, மகன் எலக்டாபிளசன், 12, ஆகியோருடன் அங்கேயே வசித்து வருகிறார். எலக்டாபிளாசன், 8ம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்-துள்ளார். நேற்று, சர்ச் அருகே உள்ள கிணற்றில் முகம் கழுவ சென்றார். நீண்ட நேரமாகியும் மகனை காணாததால் பெற்றோர் அக்கம் பக்-கத்தில் தேடியுள்ளனர்.
அப்போது, கிணற்று பகுதியில் ஏதோ சத்தம் கேட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினர். உடனடி-யாக, தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு கிணற்றில் இறங்கி, 30 நிமிடம் போராடி சிறு-வனை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், எலக்டா-பிளாசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு பெற்றோர் கதறி அழுதனர்.

