ADDED : ஜன 01, 2026 08:11 AM

ப.வேலுார்: -ப.வேலுாரில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். இங்கு, பூவன், பச்-சைநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்-ளிட்ட வாழைகளை பயிரிட்டு, தற்போது வாழைத்தார்களை வெட்டி வருகின்றனர்.
இவை, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், ப.வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்-டிற்கும் கொண்டுசென்று விற்பனை செய்யப்படு-கிறது. இங்கு ஏலம் எடுக்கப்படும்
வாழைத்-தார்கள், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்-டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்-ளிட்ட மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த வாரத்தை விட, இந்த வாரம் வாழைத்தார் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று நடந்த ஏலத்தில் கடந்த வாரம், 300 ரூபாய்க்கு
விற்ற பூவன் வாழைத்தார், 450 ரூபாய்க்கும்; 300 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி, 450 ரூபாய்க்கும்; 300 ரூபாய்க்கு விற்ற கற்பூரவல்லி, 400 ரூபாய்க்கும், மொந்தன் காய் ஒன்று, 5
ரூபாய்க்கு விற்றது, 8 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்து குறைவால்,வாழைத்தார் விலை உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

