/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஏ.டி.எம்., கொள்ளையர்கள் கைவரிசை பெங்களூரு போலீசார் விரைவில் விசாரணை
/
ஏ.டி.எம்., கொள்ளையர்கள் கைவரிசை பெங்களூரு போலீசார் விரைவில் விசாரணை
ஏ.டி.எம்., கொள்ளையர்கள் கைவரிசை பெங்களூரு போலீசார் விரைவில் விசாரணை
ஏ.டி.எம்., கொள்ளையர்கள் கைவரிசை பெங்களூரு போலீசார் விரைவில் விசாரணை
ADDED : அக் 01, 2024 07:19 AM
பள்ளிப்பாளையம்: பெங்களூரில் உள்ள, ஏ.டி.எம்., மையத்திலும் பணம் கொள்ளைய-டிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளதால், பெங்களூர் போலீசார், வெப்படை போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் வந்து விசாரணை நடத்த உள்ளனர்.
கேரளா மாநிலம் திருச்சூரில், கடந்த, 27ல், மூன்று ஏ.டி.எம்., மையங்களில், 66 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துக்கொண்டு, கன்டெய்னர் லாரியில் கொள்ளையர்கள் தப்ப முயன்றனர். அவர்-களை, நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே வெப்-படை அடுத்த செட்டியார்கடை பகுதியில், போலீசார் துப்பாக்-கியால் சுட்டு பிடித்தனர். இதில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஜூமாந்தின், 37, பலியானார். குண்டு காயத்துடன் அசர் அலி, 28, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கன்டெய்னர் லாரியில் பதுங்கியிருந்த இர்பான், சவுக்கீன் கான், முகமுது இக்ரம், சபீர், முபாரக் ஆகிய, 5 பேரை கைது செய்து, சேலம் மத்-திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து, கேரளா, ஆந்திரா போலீசார், வெப்படை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து விசா-ரணை நடத்தி சென்றனர்.இந்நிலையில், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஆனந்-தாபுரம் என்ற பகுதியிலும், ஏ.டி.எம்., மையத்தில் பணம் கொள்-ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதனால், வெப்ப-டையில் பிடிபட்ட கொள்ளை கும்பலுக்கு இதில் தொடர்பு இருக்-கலாம் என, கருதிய பெங்களூரு போலீசார், நேற்று வெப்படை போலீசாரிடம் போனில் விசாரித்தனர். இன்னும் ஓரிரு நாளில், நேரில் வந்து விசாரணை நடத்த உள்ளதாக, வெப்படை போலீசார் தெரிவித்தனர்.