/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு பேரணி
/
மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு பேரணி
ADDED : ஏப் 27, 2025 04:33 AM
பள்ளிப்பாளையம்: காவிரி பகுதியில் பொதுமக்கள், 'மஞ்சப்பை' பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையம் டவுன் பஞ்.,க்குட்-பட்ட காவிரி பகுதியில், பொது மக்கள் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். பேர-ணியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் பயன்படுத்து-வதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என, கோஷம் எழுப்பினர். மேலும், அப்பகுதியில் உள்ள கடை வியாபாரிகளி-டமும், பொது மக்களிடமும் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்-கினர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில், செயல் அலுவலர் இளவரசன், பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.