sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

/

நாமக்கல் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

நாமக்கல் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

நாமக்கல் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு


ADDED : நவ 06, 2025 01:15 AM

Google News

ADDED : நவ 06, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் வேளாண் வணிக துணை இயக்குனர் நாஷர் அறிவுறுத்தல்படி, நாமக்கல் உழவர் சந்தை சார்பில், எருமப்பட்டி வட்டாரம், அலங்காநத்தம் கோம்பையில், விவாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சேகர் தலைமை வகித்து, புதிதாக உழவர் அட்டை பெறுவதற்கான ஆவணங்கள், உழவர் சந்தையின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள், பஸ் வழித்தட புகாருக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

உதவி வேளாண் அலுவலர் கோகுல், மொத்த விலை, சில்லரை சேகரித்தல், உழவர் சந்தையில் விலை நிர்ணயம் செய்தல், நுகர்வோர்களின் புகார்கள் பற்றி எடுத்துரைத்தார். உதவி வேளாண் அலுவலர் ஸ்ரீதர், விடியற்காலை கடை ஒதுக்கீடு, டோக்கன் வழங்கி குலுக்கள் முறையில் தேர்வு செய்தல், காய்கறிகள் வரத்து குறித்து பதிவு செய்தல் உள்ளிட்டவற்றை குறித்து விளக்கினார். முகாமில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த முன்னோடி விவசாயிகள், வேளாண் துறையினர் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us