/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மஞ்சள் நிறத்தில் வந்த குடிநீரால் பகீர்
/
மஞ்சள் நிறத்தில் வந்த குடிநீரால் பகீர்
ADDED : மே 05, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, நேரு நகர் பகுதியில், நேற்று இரவு, 7:30 மணிக்கு நகராட்சி சார்பில் பொது மக்களுக்கு குடிநீர் வழங்-கப்பட்டது.
அப்போது குடிநீர் மஞ்சள் நிறத்தில் வந்தது. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சாய ஆலைகள் விதிமுறை மீறி, சாயக்கழிவுநீரை வடிகால் வழியாக வெளியேற்றி வருகின்-றனர். இவ்வாறு வடிகால் வழியாக செல்லும் சாயக்கழிவுநீர், குடிநீர் குழாயில் புகுந்து தண்ணீரில் கலந்ததால் தான், குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருகிறது என, அப்பகுதி மக்கள் தெரிவித்-தனர்.