ADDED : ஜன 02, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அங்கன்வாடி கட்ட பூமி பூஜை
நாமக்கல், ஜன. 2-
நாமக்கல் மாநகராட்சி, 8வது வார்டுக்குட்பட்ட தும்மங்குறிச்சியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் சிதிலமடைந்தது. இதனால், தற்போது தனியார் கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்காக பூமி பூஜை, நேற்று நடந்தது. எம்.பி., ராஜேஸ்குமார் அடிக்கல் நாட்டி, கட்டடம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, கமிஷனர் மகேஸ்வரி, செயற்பொறியாளர் சண்முகம், தி.மு.க., நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவக்குமார், கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

