/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சின்ன வெங்காயம், மரவள்ளிக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
/
சின்ன வெங்காயம், மரவள்ளிக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
சின்ன வெங்காயம், மரவள்ளிக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
சின்ன வெங்காயம், மரவள்ளிக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
ADDED : நவ 16, 2025 02:32 AM
ராசிபுரம்: சின்ன வெங்காயம், மரவள்ளி பயிர்களுக்கு காப்பீடு செய்ய, ராசி-புரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கார்த்திகா, விவ-சாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராசிபுரம் வட்டாரத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்-பீடு திட்டத்தின் கீழ், 'ரபி-2025'
பருவத்திற்கு சின்ன வெங்-காயம், மரவள்ளி பயிர்களுக்கு காப்பீடு செய்துகொள்ளலாம். பயிர் காப்பீடு செய்வதன் மூலம், வடகிழக்கு பருவமழையால் சேதம் ஏற்படும்பட்சத்தில், நிவாரணம் பெற இயலும். எனவே, விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்-டுறவு சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஒரு ஹெக்டேர் சின்ன வெங்காய பயிருக்கு, 5,218 ரூபாய் மற்றும் மரவள்ளி பயிருக்கு, 1,310 ரூபாய் பிரீமிய தொகை நிர்-ணயிக்கப்பட்டுள்ளது. சின்ன வெங்காய பயிருக்கு, 2026 ஜன., 31லும், மரவள்ளி பயிருக்கு, பிப்., 28லும் பிரீமியம் செலுத்த கடைசி நாளாகும். தகவல்களுக்கு, ராசிபுரம் வட்டார தோட்டக்-கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

