sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கஞ்சா விற்பனை: எருமப்பட்டி வாலிபர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

/

கஞ்சா விற்பனை: எருமப்பட்டி வாலிபர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

கஞ்சா விற்பனை: எருமப்பட்டி வாலிபர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

கஞ்சா விற்பனை: எருமப்பட்டி வாலிபர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'


ADDED : அக் 03, 2025 01:41 AM

Google News

ADDED : அக் 03, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'

நாமக்கல், நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி கைகாட்டியை சேர்ந்தவர் முகம்மது அப்துல் ரகுமான், 25. நாமக்கல் மற்றும் எருமப்பட்டி பகுதிகளில், பெற்றோர் அரவணைப்பில் இல்லாத மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கஞ்சா போதைக்கு அடிமையாக்கி, மூளை சலவை செய்து, அவர்கள் மூலம் கஞ்சா விற்று வந்தார்.

இவர் மீது, 8க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவாகி உள்ளன. தொடர்ந்து கஞ்சா குற்றங்களில் ஈடுபட்டு வந்த முகம்மது அப்துல் ரகுமானை, நாமக்கல் மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர், சமூக சீர்கேடு விளைவிக்கும் கஞ்சா குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தததால், நாமக்கல் எஸ்.பி., விமலா, கூடுதல் எஸ்.பி., தனராசு ஆகியோர் முகம்மது அப்துல் ரகுமானை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி, நாமக்கல் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.

கலெக்டர் துர்கா மூர்த்தி, முகம்மது அப்துல் ரகுமானை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது அப்துல் ரகுமானிடம், அதற்கான உத்தரவை போலீசார் வழங்கினர்.






      Dinamalar
      Follow us