/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதன்சந்தை மாட்டு சந்தையில் மாடுகள் விற்பனை சரிவு
/
புதன்சந்தை மாட்டு சந்தையில் மாடுகள் விற்பனை சரிவு
ADDED : செப் 25, 2024 01:33 AM
புதன்சந்தை மாட்டு சந்தையில்
மாடுகள் விற்பனை சரிவு
புதுச்சத்திரம், செப். 25-
புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, நாமக்கல், சேந்த மங்கலம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வாரந்தோறும் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதேபோல், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிபகள், லாரிகளில் மாடுகளை மொத்தமாக வாங்கி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். புரட்டாசி மாதம் பிறப்பால், நேற்று நடந்த புதன்சந்தை மாட்டு சந்தையில் உள்ளூர் மாடுகள் விற்பனை சரிந்து, 1.30 கோடி ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.