/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வேளாண் சந்தையில் தேங்காய் பருப்பு விலை சரிவு
/
வேளாண் சந்தையில் தேங்காய் பருப்பு விலை சரிவு
ADDED : ஆக 22, 2025 01:31 AM
ப.வேலுார் ;ப.வேலுார் அருகே, வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை, ஜேடர்பாளையம், பரமத்தி பகுதிகளில் இருந்து, விவசாயிகள் தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர். உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி சேலம், ஈரோடு, கரூர் மாவட்ட வியாபாரிகளும் வந்தனர்.
கடந்த வாரம் தேசிய வேளாண்மை சந்தையில் ஏலத்திற்கு, 7,267 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சமாக கிலோ, ரூ.226.90, குறைந்தபட்சமாக, ரூ.218.30, சராசரியாக, ரூ.222.90க்கு ஏலம் போனது. நேற்று நடந்த ஏலத்திற்கு, 11,550 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சமாக கிலோ, ரூ.221.79, குறைந்தபட்சமாக, ரூ.198.99, சராசரியாக, ரூ.219.79க்கு ஏலம் போனது. மொத்தம், 16 லட்சத்து, 18 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
தேங்காய் பருப்பு விலை சரிந்ததால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.