/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளி மாணவர்கள் மோதல்: பெற்றோருக்கு அறிவுரை
/
பள்ளி மாணவர்கள் மோதல்: பெற்றோருக்கு அறிவுரை
ADDED : அக் 26, 2024 07:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் டவுன் பஞ்., காந்திபுரம் அண்ணா நகரில் கடந்த வாரம் கபடி போட்டி நடந்தது.
அப்போது, டவுன் பஞ்., ஒரு பகுதியில் இருந்து கபடி போட்-டியை பார்க்க வந்த மாணவர்களுக்கும், அண்ணா நகரை சேர்ந்த மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த, 23ல் ஜங்கலாபுரம் - காந்திபுரம் பிரிவு ரோட்டில் மீண்டும் ஒரே பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கி-டையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த தலைமை ஆசிரியர், சேந்தமங்கலம் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர், மாணவர்களை வரவழைத்து சேந்த-மங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ்
அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.