/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓய்வூதியம் உயர்த்தி வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதியம் உயர்த்தி வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியம் உயர்த்தி வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியம் உயர்த்தி வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 16, 2025 05:56 AM

நாமக்கல்: கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, ஓய்வூதியம் உயர்த்தி வழங்கக்கோரி, புரட்சிகர தொழிலாளர்கள் கட்சி, குலசேகரன் தொழிலாளர்கள் மாநில பொது சங்கத்தினர், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநில இளைஞரணி தலைவர் பூபதி தலைமை வகித்தார். மாநில தலைவர் வெங்கடாசலம் கோரிக்கையை விளக்கி பேசினார். பொதுச்செயலாளர் சுந்தராம்பாள் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். அதில், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். பி.சாண்ட், எம்.சாண்ட் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். தமிழகரசு, தொகுதி வாரியாக டிப்போ அமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு ஆற்று மணல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். சேந்தமங்கலம் பிரிவு சாலையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

