/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
4 வழக்குகளில் ரூ.1 லட்சம் இழப்பீடு ஐ.ஓ.சி.,க்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு
/
4 வழக்குகளில் ரூ.1 லட்சம் இழப்பீடு ஐ.ஓ.சி.,க்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு
4 வழக்குகளில் ரூ.1 லட்சம் இழப்பீடு ஐ.ஓ.சி.,க்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு
4 வழக்குகளில் ரூ.1 லட்சம் இழப்பீடு ஐ.ஓ.சி.,க்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு
ADDED : பிப் 22, 2024 02:26 AM
நாமக்கல்,:'இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், 4 வழக்குகளில், ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த பன்னீர்குத்திபாளையத்தை சேர்ந்தவர் செல்வமணி, 40. இவர், இண்டேன் காஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளார்.
2019 ஜூலையில், இவரது மனைவி செல்வி, சமையல் செய்து கொண்டிருந்தபோது, சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட சேதத்திற்கு, ஆறு லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு, காஸ் சிலிண்டர் வினியோகஸ்தரிடமும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திலும் விண்ணப்பித்தார்.
அவர்கள் இழப்பீடு தராததால், 2019ல் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், செல்வமணி வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரணை முடிந்த நிலையில், நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர், தீர்ப்பளித்தனர்.
அதில், விபத்து நடந்த மறுநாளே சம்பவ இடத்தை எண்ணெய்நிறுவன அலுவலர்களும், உள்ளூர் வினியோகஸ்தரின் அலுவலர்களும் ஆய்வு செய்துள்ளனர். ஆனால், இன்சூரன்ஸ் தொகையை வாடிக்கையாளருக்கு பெற்று தரவில்லை.
வாடிக்கையாளர் வழக்கு தாக்கல் செய்த பின், விபத்து நடந்ததில் இருந்து, 30 மாதம் கழித்து இன்சூரன்ஸ் தொகை, இரண்டு லட்சம் ரூபாயை, இன்சூரன்ஸ் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்கியுள்ளது. இன்சூரன்ஸ் தொகையை வழங்க, 30 மாதம் காலதாமதம் செய்தது சேவை குறைபாடே.
அதனால், ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, உள்ளூர் வினியோகஸ்தர், ஆயில் நிறுவனம், இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகிய ஒவ்வொருவரும், இழப்பீடாக, 91,875 ரூபாயை, நான்கு வாரங்களுக்குள் பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதேபோல், 2022 அக்.,ரில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வினியோகஸ்தரான, நாமக்கல், திருச்செங்கோடு கூட்டுறவு சங்கம் நடத்தும் பெட்ரோல் பங்கில், நாமக்கல்லை சேர்ந்த சுப்பராயன், 78, சுப்ரமணி, 70, ஆகியோர் பெட்ரோல் போட்டுள்ளனர்.
அவர்களுக்கு, 200 ரூபாய்க்கு மேல் பெட்ரோல் வாங்கினால், பரிசு கூப்பன் ஒன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர் கூறியபடி, 200 ரூபாய்க்கு மேல் பெட்ரோல் போட்டு பரிசு கூப்பன் பெற்றுள்ளனர்.
கூப்பன்களை வாங்கிய பின், பரிசானது குலுக்கல் முறையில் வழங்கப்படுகிறது என்பது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.
இத்தகைய செயல் நேர்மையற்ற வணிக நடைமுறை என, 3 வழக்குகளை, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒவ்வொரு வழக்கிலும், தலா, 3,000 ரூபாய் வீதம் இழப்பீடாகவும், செலவு தொகையாகவும், 4 வாரங்களுக்குள் வழங்க ஆயில் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.