/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.1.70 கோடிக்கு மாடுகள் விற்பனை
/
ரூ.1.70 கோடிக்கு மாடுகள் விற்பனை
ADDED : அக் 30, 2024 01:10 AM
ரூ.1.70 கோடிக்கு
மாடுகள் விற்பனை
புதுச்சத்திரம், அக். 30-
புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, நாமக்கல், புதுச்சத்திரம், சேந்தமங்கலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதேபோல், மாடுகள் வாங்கி செல்ல கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகின்றனர்.
கடந்த, 2 வாரமாக மாட்டுச்சந்தைக்கு தொடர்ந்து மாடுகள் வரத்து அதிகரித்துள்ளதால், விற்பனையும் அதிகரித்தது. கடந்த வாரம், 1.40 கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனையான நிலையில், நேற்று, 1.70 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.