/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம்; கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க கோரிக்கை
/
படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம்; கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க கோரிக்கை
படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம்; கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க கோரிக்கை
படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம்; கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க கோரிக்கை
ADDED : அக் 18, 2024 07:04 AM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் பகுதியில் காலை நேரங்களில் போதிய அரசு பஸ் வசதி இல்லாததால், மாணவர்கள் ஆபத்தை உணராமல் படிகளில் தொங்கியபடி செல்கின்றனர். கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என, மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம்- திருச்செங்கோடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்ட் வழியாக தினமும் காலை நேரத்தில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், நெசவாளர்காலனி, திருச்செங்கோடு, பள்ளிபாளையம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்றனர். காலை நேரத்தில் குறைவான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுவதால், மாணவர்களுக்கு பஸ்சில் உட்கார இடம் கிடைக்காததால், ஆபத்தை உணராமல், படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே, சம்மந்தப்பட்ட போக்குவரத்துதுறை அதிகாரிகள் முறையான ஆய்வுமேற்கொண்டு தினமும் காலை நேரங்களில் ஆட்டையாம்பட்டியில் இருந்து திருச்செங்கோடு வரை கூடுதலாக அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.