/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு
/
ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு
ADDED : அக் 12, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: ஆயுதபூஜையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி, ஏகாதசி, தமிழ்மாத முதல் ஞாயிறு, அமாவாசை, பவுர்ணமி, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருட பிறப்பு உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.அதன்படி, ஆயுதபூஜை நாளான நேற்று காலை, 9:00 மணிக்கு வடைமாலை சாற்றப்பட்டு தொடர்ந்து பல்வேறு அபிஷேகம் நடந்தது.
பின், காவி உடை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்-பாலித்தார். பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரி-சனம் செய்தனர்.
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.