/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சர்க்கரை நோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
/
சர்க்கரை நோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : நவ 20, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம், புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தை பகுதியில் வசிக்கும் கிராம மக்களுக்கு, சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது.
காமராஜர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். இதில், நாமக்கல் மருத்துவர்கள் சங்க தலைவர் குழந்தைவேல், சுப்பிரமணியம் உள்ளிட்டோர், பேரணியை துவக்கி வைத்தனர்.
இதில், ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு சர்க்கரை நோய் இளமை, முதுமை, ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் வரும் நோய். சாக்கரை நோய் வராமல் இருக்க, 10 அடி நடந்தால், 100 அடிக்கு நோய் குறையும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊர்வலமாக
சென்றனர்.

