ADDED : ஆக 18, 2025 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான்பேட்டை, மோகனுார் பிரிவு சாலையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழி சந்தை கூடுகி-றது. இங்கு, பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்டமங்கலம், பொத்தனுார் மற்றும் ப.வேலுார் பகுதியை சேர்ந்த விவசாயிகள், மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருவர். அவ்வாறு கொண்டு வரப்படும், நாட்டுக்கோழிகளை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டி வாங்கிச் செல்வர்.
கடந்த வாரத்தைவிட இந்த வாரம், கோழிகள் வரத்து அதிகரித்-ததால், அதன் விலை சரிந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ நாட்-டுக்கோழி, 650 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், நேற்று, 500 ரூபாய்க்கு விற்பனையானது.