sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காவிரியில் சாயக்கழிவு கலப்பு; நிறம் மாறி விஷமாகும் குடிநீர்

/

காவிரியில் சாயக்கழிவு கலப்பு; நிறம் மாறி விஷமாகும் குடிநீர்

காவிரியில் சாயக்கழிவு கலப்பு; நிறம் மாறி விஷமாகும் குடிநீர்

காவிரியில் சாயக்கழிவு கலப்பு; நிறம் மாறி விஷமாகும் குடிநீர்


ADDED : பிப் 10, 2025 07:21 AM

Google News

ADDED : பிப் 10, 2025 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்தேக்க பகுதியில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரித்து, பள்ளிப்பாளையம், ஆலாம்பாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு தேவையானளவு குடிநீர் வழங்க, ஓடப்பள்ளி தடுப்பணை நீர்தேக்கத்தில் குடிநீருக்கு மட்டும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, சாயக்கழிவுநீர் ஆற்றில் அதிகளவு கலந்து வருகிறது.

இதனால் தண்ணீர் பச்சை நிறமாக மாறிவிட்டது. சுத்திகரிப்பு செய்து வழங்கினாலும் குடிக்க முடியாத நிலை ஏற்படும். சாயக்கழிவு நீரால் குடிநீர் விஷமாகும் நிலை தான் ஏற்படுகிறது. இந்த தண்ணீரை மக்கள் குடிக்கும் போது புற்றுநோய், கிட்னி பாதிப்பு உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, குடிநீர் விஷமாவதை தடுக்க, விதிமுறை மீறி செயல்படும் சாய ஆலைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us