/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மொபட் மீது லாரி மோதி விபத்து: முதியவர் பலி
/
மொபட் மீது லாரி மோதி விபத்து: முதியவர் பலி
ADDED : நவ 17, 2024 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் குஞ்சான், 88. இவர், சேலம் சாலையில் நவதானிய கடை நடத்தி வந்தார். நேற்று காலை, 9:00 மணிக்கு, கடையை திறப்பதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தார். நாமக்கல் அண்ணாதுரை சிலை அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி, மொபட் மீது மோதி விபத்-துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்து-வமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.