ADDED : அக் 08, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், குமாரபாளையம், பெரியார் நகரை சேர்ந்தவர் சின்னத்தாயி, 80; இவர், நேற்று முன்தினம் காலை, வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
காவிரி பழைய பாலம் அருகே, மயங்கி விழுந்த மூதாட்டியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு இறந்தார். இதுகுறித்து அவரது மகள் பழனியம்மாள், 58, கொடுத்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.