/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோவில் சொத்து ஆக்கிரமிப்பு; அறநிலையத்துறை நோட்டீஸ்
/
கோவில் சொத்து ஆக்கிரமிப்பு; அறநிலையத்துறை நோட்டீஸ்
கோவில் சொத்து ஆக்கிரமிப்பு; அறநிலையத்துறை நோட்டீஸ்
கோவில் சொத்து ஆக்கிரமிப்பு; அறநிலையத்துறை நோட்டீஸ்
ADDED : நவ 13, 2024 07:29 AM
குமாரபாளையம்: குமாரபாளையம், அப்புராயர் சத்திரம் பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் வந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாலக்கரை, பழைய காவலர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும், 82 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், அப்புராயர் சத்திரம் ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும், 21க்குள் ஆக்கிரமிப்பை அகற்றி, கோவில் நிலங்களை ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறினால் காவல்துறை, வருவாய்த்துறை முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

