ADDED : நவ 01, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி, நவ.1-
எருமப்பட்டி டவுன் பஞ்., மாதாந்திர கூட்டம் தலைவர் பழனியாண்டி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் நாகேஷ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 283.89 லட்சம் ரூபாய் மதிப்பில், தார் சாலை, 120 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட வாரச்சந்தை கட்டடத்தை திறந்து வைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், 15வது நிதிக்குழு மானியத்தில் அம்பேத்கர் நகரில் மழைநீர் வடிகால் அமைக்க, 5.50 லட்சம் மதிப்பில் பணி மேற்கொள்ளப்பட உள்ளதற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் துணை தலைவர் ரவி உள்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.