/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளஸ் 1 தேர்வில் தோல்வி: தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க கோரிக்கை
/
பிளஸ் 1 தேர்வில் தோல்வி: தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க கோரிக்கை
பிளஸ் 1 தேர்வில் தோல்வி: தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க கோரிக்கை
பிளஸ் 1 தேர்வில் தோல்வி: தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க கோரிக்கை
ADDED : ஆக 10, 2025 12:52 AM
நாமக்கல், 'தமிழகத்தில், பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே நடந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து மாணவர்களையும், தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில், பிளஸ் 1 வகுப்பிற்கு பொதுத்தேர்வு முறை கொண்டுவந்த பின், ஆண்டுதோறும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளியில் இருந்து இடைநின்று வேறு வேலைக்கு செல்ல துவங்கினர். தமிழகத்தில், 2017-18 முதல், நடப்பாண்டு வரை, பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் இடைநிற்றலுக்கு காரணமாக அமைந்திருந்தது பிளஸ் 1 பொதுத்தேர்வு.
அவற்றை ரத்து செய்ததை வரவேற்கிறோம். மேலும், 2017-18 முதல், 2024-25 வரை, பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர் அனைவரையும், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.