ADDED : செப் 24, 2024 01:26 AM
நாமக்கல்: நாமக்கல், திருச்செங்கோட்டில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், 26ல் நடக்கிறது என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாமக்கல், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ.,க்கள் தலை-மையில், 26 காலை, 11:00 மணிக்கு நாமக்கல் கோட்டத்திற்கு நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கிலும்; திருச்செங்-கோடு கோட்டத்திற்கு, பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்குகளிலும் நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில் நுட்-பங்கள், வேளாண் இடு பொருள் இருப்பு விபரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர
துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.