/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இன்று காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
/
இன்று காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
ADDED : நவ 28, 2025 01:28 AM
நாமக்கல், ந நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., தலைமையில் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
காஸ் நுகர்வோர் நலன் கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன மேலாளர்கள், காஸ் முகவர்கள், வினியோகஸ்தர்கள், காஸ் நுகர்வோர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன் 'காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்' நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் இன்று (நவ.,28) மதியம் 3:00 மணிக்கு நடைபெற உள்ளது.
காஸ் வினியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள், கூட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். இத்தகவலை, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

