ADDED : அக் 15, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, பவித்திரத்தில் நேற்று ஆட்டுச்சந்தை கூடியது. இங்கு, முட்டாஞ்செட்டி, கஸ்துாரிப்பட்டி, நவலடிப்பட்டி, செல்லிபாளையம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
தொடர் மழையால், நேற்று ஆடுகள் வரத்து குறைந்தது. இதனால், கடந்த வாரம், 43 லட்சம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில், நேற்று, 38 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.