sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காப்பீடு தொகை தாமதத்தால் நோயாளியை அனுப்ப மறுத்த மருத்துவமனை முற்றுகை

/

காப்பீடு தொகை தாமதத்தால் நோயாளியை அனுப்ப மறுத்த மருத்துவமனை முற்றுகை

காப்பீடு தொகை தாமதத்தால் நோயாளியை அனுப்ப மறுத்த மருத்துவமனை முற்றுகை

காப்பீடு தொகை தாமதத்தால் நோயாளியை அனுப்ப மறுத்த மருத்துவமனை முற்றுகை


ADDED : டிச 30, 2024 03:27 AM

Google News

ADDED : டிச 30, 2024 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துாரை அடுத்த அக்கரைப்

பட்டியை சேர்ந்த செங்கோட்டையன் மனைவி லலிதா, 42; தம்ப-திக்கு இரு குழந்தைகள் உள்ளன. ஒரு வாரத்துக்கு முன் வயிற்று வலியால், ராசிபுரத்தில் ஆத்துார் பிரதான சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லலிதா சிகிச்சைக்கு சேர்ந்தார். மருத்துவ பரிசோதனையில் கர்ப்பப்பையை அகற்றுமாறு கூறியுள்-ளனர்.

சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்த செங்கோட்டையன், தன்னு-டைய குடும்பத்திற்கு, 'ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்' பாலிசி இருப்பதாக கூறி, மருத்துவமனையில் உள்ள இன்சூரன்ஸ் பிரிவை அணுகியுள்ளார். ஆப்பரேஷனுக்கு, 1.3௦ லட்சம் ரூபாய் செலவாகும். பாலிசி கிளைம் கிடைக்க தாமதமாகலாம். அல்லது ஒரு பகுதி மட்டுமே கிடைக்கும். எனவே முதல்கட்டமாக, 50,000 ரூபாய் செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறி-யுள்ளனர்.

இதையடுத்து, 50,000 ரூபாயை செலுத்தியுள்ளார். கடந்த வாரம் ஆப்ரேஷன் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு லலி-தாவை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாமா என

கேட்டுள்ளனர். காப்பீட்டு தொகை இன்னும் வரவில்லை எனக்-கூறி அனுப்ப மறுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்-றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இன்சூரன்ஸ் பணம் கிளைம் ஆகவில்லை என்றால், மீதி தொகையை செலுத்த செங்-கோட்டையன் சம்மதித்தார். இதையடுத்து நோயாளியை வீட்-டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் மருத்துவமனை சாலையில்,

நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us