sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மேட்டூர் உபரி நீரை திருமணிமுத்தாறுடன் இணைத்து விவசாய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்: எம்.பி.,

/

மேட்டூர் உபரி நீரை திருமணிமுத்தாறுடன் இணைத்து விவசாய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்: எம்.பி.,

மேட்டூர் உபரி நீரை திருமணிமுத்தாறுடன் இணைத்து விவசாய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்: எம்.பி.,

மேட்டூர் உபரி நீரை திருமணிமுத்தாறுடன் இணைத்து விவசாய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்: எம்.பி.,

1


ADDED : செப் 18, 2024 06:54 AM

Google News

ADDED : செப் 18, 2024 06:54 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ''மேட்டூர் உபரி நீரை, திருமணிமுத்தாறுடன் இணைத்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் நிரப்பி, விவசாய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்,'' என, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் கூறினார்.

இதுகுறித்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கொங்கு மண்டலத்தில் ஜவுளி தொழிலை மேம்படுத்த, மத்திய அமைச்சர் நேரில் வந்து ஆய்வு செய்ய உள்ளதாக கூறியுள்ளார். சங்ககிரி பகுதியில், சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை ஸ்துாபி மட்டுமே உள்ளது. அங்கு அவரது உருவச்சிலை அமைக்க, மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் - சேலம் சாலை, பெருமாள் கோவில்மேடு, புதுச்சத்திரம், கருங்கல்பாளையம் பகுதியில், வாகன விபத்து அதிகம் நடப்பதால், அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க, மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அதில், கருங்கல்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது.

நாமக்கல் மாநகராட்சி கழிவுநீரால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையம் விரிவுபடுத்தப்பட்டு, மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம், சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேட்டூர் உபரி நீரை திருமணிமுத்தாறுடன் இணைத்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் குட்டைகளில் நிரப்பி, விவசாய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us