/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விநாயகர் சதுர்த்திக்கு சிலை தயாரிப்பு பணி 'விறுவிறு'
/
விநாயகர் சதுர்த்திக்கு சிலை தயாரிப்பு பணி 'விறுவிறு'
விநாயகர் சதுர்த்திக்கு சிலை தயாரிப்பு பணி 'விறுவிறு'
விநாயகர் சதுர்த்திக்கு சிலை தயாரிப்பு பணி 'விறுவிறு'
ADDED : ஜூலை 06, 2025 12:53 AM
குமாரபாளையம், விநாயகர் சதுர்த்தி விழா, வரும் ஆக., 27ல் கொண்டாடப்பட உள்ளது. அப்போது, குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவர். பின், விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் கறைப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விநாயகர் சிலைகள், சிறிய அளவு முதல் பெரிய அளவிலான சிலைகள் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சிலை வியாபாரி கார்த்திகேயன் கூறியதாவது:
விநாயகர் சிலைகளை, குலத்தொழிலாக எங்கள் குடும்பத்தார் தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம். அரை அடி முதல், 10 அடி வரை தயார் செய்து விற்பனை செய்கின்றோம். இந்த சிலைகள் அரசு விதிப்படி, நீரில் எளிதில் கரையும் பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.
எந்த ரசாயன கலவையும் இதில் பயன்படுத்தப்படவில்லை. மாசு கட்டுப்பாடு துறையின் அறிவுரைப்படி, ஜிகினா வேலைப்பாடுகள் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்டரின் பேரில் சிலை தயாரிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.